திருப்பாவை
Thiruppaavai
திருப்பாவை
Thiruppaavai
Thiruppaavai
சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த
தனியன்
பராசரபட்டர் அருளிச்செய்த
நீளா துங்கஸ்தனகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம் !
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமதயாபயந்தீ !!
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே !
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய : !! 1
அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் !
பன்னு திருப்பாவைப் பல்பதியம்! - இன்னிசையால் !
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை !
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு . !! 2
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே, தொல்பாவை !
பாடி அருளவல்ல பல்வளையாய் ! - நாடி நீ !
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் !
நாம்கடவா வண்ணமே நல்கு . ! 3
ஆண்டாள் திருவடிகளே சரணம் !
*******
1. மார்கழித் திங்கள்
நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் !
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் !
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் !
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் !
நாராயணனே நமக்கே பறை தருவான் !
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் ! 1
2. வையத்து வாழ்வீர்காள் !
வையத்து வாழ்வீர்காள் ! நாமும் நம் பாவைக்குச் !
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் !
பையத் துயின்ற பரமனடி பாடி !
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி !
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் !
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் !
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி !
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய். ! 2
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி !
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் !
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து !
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப் !
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப !
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி !
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் !
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய். ! 3
4. ஆழிமழைக் கண்ணா
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி !
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து !
பாழியந்தோளுடைப் பத்(ற்)மநாபன் கையில் !
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து !
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் !
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் !
மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் . ! 4
5. மாயனை மன்னு
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் !
தூய பெருநீர் யமுனைத் துறைவனை !
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் !
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை !
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது !
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க !
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் !
தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய். ! 5
6. புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் !
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ ?
பிள்ளாய் எழுந்திராய் ! பேய்முலை நஞ்சுண்டு !
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி !
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை !
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் !
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் !
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். ! 6
7. கீசு கீசு என்றும்
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து !
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே !
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து !
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் !
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ !
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி !
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ !
தேசமுடையாய் ! திற ஏலோர் எம்பாவாய். ! 7
8. கீழ்வானம் வெள்ளென்று
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு !
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் !
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் !
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய !
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு !
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய !
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் !
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். ! 8
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய !
தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் !
மாமான் மகளே ! மணிக்கதவம் தாள் திறவாய் !
மாமீர் ! அவளை எழுப்பீரோ ? உம் மகள் தான் !
ஊமையோ ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று !
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய். ! 9
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் !
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் !
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் !
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள் !
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் !
தோற்று முனக்கே பெருந்துயில் தான்தந்தானோ ?
ஆற்ற அனந்தலுடையாய் ! அருங்கலமே !
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய். ! 10
11. கற்றுக் கறவை
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து !
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் !
குற்ற ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே !
புற்றரவல்குல் புனமயிலே போதராய் !
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின் !
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட !
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ !
ஏற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய். ! 11
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு கிறங்கி !
நினைத்து முலை வழியே நின்று பால் சோர !
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் !
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றிச் !
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற !
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் !
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் !
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய். ! 12
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் !
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் !
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் !
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று !
புள்ளும் சிலம்பின காண் ! போது அரிக்கண்ணினாய் !
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே !
பள்ளிக் கிடத்தியோ பாவாய் ! நீ நன்னாளால் !
கள்ளம் தவிர்த்து கலந்து ஏலோர் எம்பாவாய். ! 13
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் !
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் !
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் !
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் !
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் !
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் !
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் !
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய். ! 14
எல்லே இளங்கிளியே ! இன்னம் உறங்குதியோ !
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன் !
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் !
வல்லீர்கள் நீங்களே நா(னே) தான் ஆயிடுக !
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை !
எல்லாரும் போந்தாரோ ? போந்தார் போந்து எண்ணிக் கொள் !
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க !
வல்லானை மாயானை பாடு ஏலோர் எம்பாவாய். ! 15
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய !
கோயில் காப்பானே ! கொடித் தோன்றும் தோரண !
வாயில் காப்பானே ! மணிக்கதவம் தாள் திறவாய் !
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை !
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் !
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் !
வாயால் முன்னமமுன்னம் மாற்றாதே அம்மா நீ !
நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் ! 16
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் !
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் !
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே !
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் !
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த !
உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய் !
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா !
உம்பியும் நீயும் உறங்கேல் ஏலோர் எம்பாவாய் ! 17
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் !
நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னாய் !
கந்தம் கமழும் குழலீ ! கடைதிறவாய் !
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் ! மாதவிப் !
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் !
பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாடச் !
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப !
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய். ! 18
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் !
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி !
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் !
வைத்துக் கிடந்த மலர் மார்பா ! வாய் திறவாய் !
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை !
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் !
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் !
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய். ! 19
20. முப்பத்து மூவர்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று !
கப்பம் தவிர்க்கும் கலியே ! துயிலெழாய் !
செப்பமுடையாய், திறல் உடையாய் செற்றார்க்கு !
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் !
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் !
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை !
இப்போதே எம்மை நீராட்டு ஏலோர் எம்பாவாய். ! 20
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப !
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் !
ஆற்றப் படைத்தான் மகனே ! அறிவுறாய் !
ஊற்ற உடையாய் ! பெரியாய் உலகினில் !
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் !
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற் கண் !
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே !
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய். ! 21
அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான !
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே !
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் !
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே !
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ !
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் !
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் !
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய். ! 22
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் !
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து !
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி !
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் !
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன் !
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய !
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த !
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். ! 23
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி !
பொன்றச் சகட உதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் !
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய். ! 24
25. ஒருத்தி மகனாய்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் !
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் !
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த !
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் !
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை !
அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில் !
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி !
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய். ! 25
26. மாலே மணிவண்ணா
மாலே ! மணிவண்ணா மார்கழி நீராடுவான் !
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் !
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன !
பால அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே !
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே !
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே !
கோல விளக்கே கொடியே விதானமே !
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய். ! 26
27. கூடாரை வெல்லும்சீர்
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் !
பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் !
நாடு புகளும் பரிசினால் நன்றாக !
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே !
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் !
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு !
மூட நெய் பெய்து முழங்கை வழிவார !
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். ! 27
28. கறவைகள் பின்சென்று
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் !
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் !
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம் !
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உந் தன்னோடு !
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது !
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் !
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே !
இறைவா ! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய். ! 28
29. சிற்றஞ்சிறுகாலே
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன் !
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் !
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ !
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது !
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு !
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் !
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். ! 29
30. வங்கக்கடல் கடைந்த
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி !
அங்கு அப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப் !
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன !
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே !
இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் !
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் !
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். ! 30
ஆண்டாள் திருவடிகளே சரணம் !
******